புஜ் நகரின் தெற்குப் பகுதியில் சுமார் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கேரா, சோலாங்கி ஆட்சியாளர்களின் காலத்தைய சிவன் கோயில் ஒன்றைக் கொண்டுள்ளது.
இக்கோயிலின் பெரும்பாலான பகுதி 1819 ஆம் ஆண்டு நிகழ்ந்த பூகம்பத்தின் போது சிதைக்கப்பட்டு விட்டாலும், கோயிலின் ஒரு பாதி, சந்நிதானம் மற்றும் விக்ரகங்கள் இப்போதும் நல்ல நிலையிலேயே காணப்படுகின்றன. இதற்கு அடுத்தாற் போல் அமைந்துள்ள கபில்கோட் கோட்டையும் சிதைந்தே காணப்படுகிறது.