காவ்தா செல்வது பல்வேறு காரணங்களினால் சிறப்பானதாகக் கூறப்படுகிறது. கட்ச்சின் கடைக்கோடி கிராமமான இதில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவு சென்றால் இந்திய-பாகிஸ்தான் எல்லையை அடையலாம்.
இக்கிராமம், உள்ளூர் கைத்தொழில் கலைஞர்களால் உருவாக்கப்படும் கைவினைப் பொருட்கள், தோல் பொருட்கள் மற்றும் கலை நயம் மிக்க துணி வகைகளுக்கு மிகவும் புகழ் பெற்றதாகும்.
மேலும் இச்சிற்றூர், வருடந்தோறும் ஆயிரக்கணக்கான செந்நாரைகள் புலம் பெயர்ந்து வந்து தங்கக் கூடியதான உலகின் மிகப்பெரிய செந்நாரைக் குடியிருப்பைக் கொண்டுள்ளது.
ஜாம்குந்தாலியா பாலைவனத்தின் ஏரி ஒன்றின் அருகில் காணப்படும் இந்த குடியிருப்பு, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட மாதங்களில் இங்கு வரும் சிறகுடைய விருந்தினர்களான செந்நாரைகளால் நிறைந்து காணப்படும்.
ஒட்டகத்தின் மேல் அமர்ந்து சென்றே இக்குடியிருப்பைக் காணலாம் என்பது இவ்விடத்தின் மற்றொரு சுவாரஸ்யமான அம்சமாகும்.