இந்த பாலைவன சரணாலயம் மொத்தமுமே காண்போரை செயலிழக்கச் செய்யும் அழகோடு காணப்படுன்றது. 1986 ஆம் வருடத்தில் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த வசீகரமான கட்ச் பாலைவன விலங்குகள் சரணாலயம் ஏராளமான பாலூட்டி வகை விலங்குகளுக்கும், பல அரிய வகை பறவையினங்களுக்கும் ஆதரவளித்து வருகிறது.
கட்ச் பகுதியின் கிரேட் ரானில் அமைந்துள்ள இது, சுமார் 0.5 மற்றும் 1.5 அடி நீரின் ஆழத்தோடு கூடிய, உப்புக்கரிக்கும் மிகப்பெரிய பருவகால ஈரநிலங்களுள் ஒன்றாகும்.
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களின் போது, இங்குள்ள மழை நீர் சுத்தமாக வறண்டு, இந்த சரணாலயத்தின் மொத்தப் பகுதியையும் உப்பார்ந்த பாலைவனமாக மாற்றி விடுகிறது.