நீங்கள் கட்ச் அருங்காட்சியகத்துக்கு அருகிலோ அல்லது புஜ் நகரின் ராம் தன் கோயிலுக்கு அருகிலோ இருந்தீர்களானால், இக்கிணற்றின் படிக்கட்டில் சில படிகள் இறங்கினால் பேரமைதியை உணர முடியும்.
ராம் தன் கோயிலுக்கு அருகில் உள்ள இக்கிணற்றின் அருகாமையில் சில நிமிடங்கள் கழிப்பது மனதுக்கு இதமளிக்கும் என்றால், அதன் ஒரு புறத்தில் தீட்டப்பட்டுள்ள இராமாயண கதாப்பாத்திரங்களின் அழகிய சித்திரங்களையும், விஷ்ணு பகவானின் பத்து அவதாரங்ளையும் பார்த்து ரசிப்பது மேலும் கிளர்ச்சியூட்டுவதாக இருக்கின்றது.