ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பயணிகளின் மனதையும் எண்ணங்களையும் சுண்டி இழுக்கும் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அந்த வகையில் குலு மாவட்டத்தில் அமைந்துள்ள புண்டர் நகரம் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது. இந்த நகரம் குலு பள்ளத்தாக்கைப் பற்றிய வரலாறு மற்றும் சமய கொள்கைகளுக்கு ஒரு நுழை வாயிலாக இருக்கிறது.
புண்டர் நகரத்தின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அது கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்படும் நோவாவின் வரலாற்றை ஒத்திருக்கிறது.
அதாவது நாகரீகத்தை தொடங்கி வைத்தவர் என்று நம்பப்படுகிற மனு என்பவர், இந்து கடவுள்களுக்காக ஒரு சுதந்திரமான சபையைத் தொடங்கி வைத்தார். இந்த சபையின் ஒழுங்குபடி சமூகத்தில் உள்ள மக்களை இந்த கடவுள்கள் ஆட்சி புரிய வேண்டும்.
புண்டர் பகுதியில் பசேஷ்வர் மகாதேவ் ஆலயம், ஜெகனாத் ஆலயம், ஆதி பிரம ஆலயம் மற்றும் பிஜிலி மகாதேவ் ஆலயம் போன்ற எண்ணற்ற இந்து ஆலயங்கள் நிரம்பி இருக்கின்றன.