பண்டாசேர் ஜெயின் கோயில் என்றழைக்கப்படும் இந்த அழகிய கோயில் பிகானேர் நகரத்திலிருந்து 5கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஜைன மதப்பிரிவின் 5வது தீர்த்தங்கரரான சுமதிநாத் பஹவானுக்காக எழுப்பப்பட்டிருக்கும் இக்கோயில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோயிலின் சுவர்களில் அற்புதமான சுவரோவியங்கள், கண்ணாடி வேலைப்பாடுகள், தங்க இலை ஓவியங்கள் போன்ற நுணுக்கமான அலங்காரங்களை பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.
ஐதீக நம்பிக்கைகளின்படி, தூய நெய் மற்றும் தேங்காய் போன்ற பொருட்கள் இந்த கோயிலை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அற்புதமாக வடிவமைக்கப்பட்ட சிலைகள், சிற்பவடிப்புகள், சுவரோவியங்கள், உன்னதமான கட்டிடக்கலை வடிவமைப்பு போன்ற அம்சங்களுக்காக இந்தக் கோயில் மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.
சிவப்புக்கற்கள் மற்றும் வெண்பளிங்குக்கற்களில் பிரமிக்க வைக்கும் செதுக்கல் வேலைப்பாடுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. உயரத்தில் அமைந்திருக்கும் இக்கோயில் மீதிருந்து பயணிகள் பிகானேர் நகரத்தின் அழகையும் நன்றாக ரசிக்கலாம்.