இந்த வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட கோவிலாக விளங்குகிறது மதன்மோகன் கோவில். 1600-ஆம் ஆண்டு துர்ஜனா சிங் தேவ் அரசரால் கட்டப்பட்டதாகும் இந்த கோவில். இது கிருஷ்ணர் மற்றும் ராதைக்காக கட்டப்பட்ட கோவிலாகும்.
இங்குள்ள ரத வடிவமைப்பிலான கட்டமைப்பை பராமரிக்கும் முறையை பார்த்து யாராலும் பாராட்டாமல் போக முடியாது. மேலும் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் உள்ள கதைகள் எல்லாம் இங்குள்ள சுவர்களில் செதுக்கப்பட்டிருக்கும்.