பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களுள் ஒன்றான மொய்ராங்க் என்னும் நகரில் அமைந்துள்ளது எபுதொவ் தங்க்ஜிங்க் கோவில்.
எபுதொவ் தங்க்ஜிங்க் கோவிலானது, மணிப்பூர் மக்கள் பாரம்பரியமாக வழிபட்டுவரும் கடவுள்களில் மிகச் சிறப்பு வாய்ந்தவரான, தங்க்ஜிங்க் கடவுளுக்கெனக் கட்டப்பட்டுள்ள கோவிலாகும்.
மொராங்க் மக்களையும் மொய்ராங்க் நகரினையும் தங்க்ஜிங்க் கடவுள் தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கிறார் என்பது இங்கு உள்ள மக்களின் நம்பிக்கையாகும்.
லாய் ஹரோபா பண்டிகையின்போது எபுதொவ் தங்க்ஜிங்க் கோவிலானது ஒளிமிகுந்த விளக்குகளால் அலங்கரிக்கப்படு ஒளிவெள்ளத்தில் மிதக்கும். இந்து மதத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து கடவுளாக வழிபட்டு வரும் தங்க்ஜிங்க் என்னும் கடவுளுக்கு கொண்டாடப்படும் பண்டிகைதான் லாய் ஹரோபா ஆகும்.
இது மே மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள தொலைதூரங்களிலிருந்து கூட மக்கள் வருகிறார்கள். ஆட்டம், பாட்டம் , விருந்துக்கொண்டாட்டம் என்று பல்வேறு விதமான கேளிக்கைகள் இத்திருவிழாவின்போது நடக்கின்றன. இத்திருவிழா சுமார் ஒரு மாதம் நீடிக்கிறது.
இப்பண்டிகையின்போது மணிப்பூர் மக்களின் ஆண்களும் பெண்களும் கலாச்சார உடைகளை அணிந்துகொண்டு, கோவிலுக்குச் செல்கிறார்கள். கம்பா தொய்பி எனப்படும் பாரம்பரிய நடனத்தை இப்பண்டிகையின் போது இப்பகுதி மக்கள் ஆடிக் களிக்கிறார்கள்.
லாய் ஹரோபா பண்டிகையின்போது மொய்ராங்கிற்குச் சென்று அப்பண்டிகைக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு மகிழ்ச்சியில் திளைக்கும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.