மௌரிய ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த இந்த பராபர் குடைவறை அமைப்புகள் நாட்டிலேயே மிகப்பழமையான பாறைக்குடைவு அமைப்புகளாகும். கிரானைட் பாறைகளில் குடையப்பட்டிருக்கும் இந்த அமைப்புகளின் உள்ளே பெரும்பாலும் இரண்டு அறைகள் காணப்படுகின்றன.
இவற்றின் உட்புறம் வழவழப்பாகவும், நம்ப முடியாத ஒழுங்குத்தன்மையுடனும் காட்சியளிப்பது பார்வையாளர்களை பிரமிக்கவைக்கும் ஒரு அம்சமாகும்.
மேலும் இந்த பாறைக்குடைவு அறைகள் எதிரொலி அம்சங்களையும் கொண்டுள்ளன. இந்த குடைவறைகளுக்கான நுழைவாயில் அமைப்பும் வித்தியாசமான வடிவமைப்பு மற்றும் நுணுக்கங்களுடன் காட்சியளிக்கின்றன.
இவற்றில் காணப்படும் அதி நுண்ணியமான துல்லியமும் நேர்த்தியும் அக்காலத்தில் எப்படி சாத்தியமாயிற்று எனும் வியப்பையும் மலைப்பையும் இங்கு பார்வையாளர்கள் உணரலாம்.
கரண் சௌபர், லோமாஸ் ரிஷி, சுதாமா மற்றும் விஸ்வ ஜோப்ரி எனப்படும் நான்கு பிரம்மாண்ட பாறைக்குடைவறைகள் இவற்றில் முக்கியமானதாக அமைந்துள்ளன.