மனம் மயங்கவைக்கும் இந்த துங்கேஷ்வரி குகைக்கோயில்கள் மஹாகலா குகைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. மிகவும் புனிதமாக மதிக்கப்படும் ஆன்மீக அம்சங்களாக இவை வீற்றிருக்கின்றன.
போத்கயா நோக்கி செல்வதற்குமுன் இந்த குகைக்கோயில்களில் புத்தர் தியானத்தில் ஈடுபட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த குகைக்கோயில் வளாகம் ஹிந்து மற்றும் பௌத்த சன்னதிகளை உள்ளடக்கிய மூன்று முக்கிய குகைக்கோயில்களை கொண்டுள்ளது.