போம்டிலாவிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள நகரமாக பாலுக்போங் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 213 மீ உயரத்தில் உள்ள இந்நகரத்தில் சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் பேரழகை இரசித்திட முடியும். தேஸ்பூரிலிருந்து 52 கிமீ தொலைவிலேயே உள்ளதால், இந்நகரத்ததை தேஸ்பூரிலிருந்தும் அடைய முடியும்.
'அகா' என்றழைக்கப்பட்ட உள்ளூர் பழங்குடியின ஆட்சியாளர்களால் பாலுக்போங் ஆளப்பட்டு வந்துள்ள இந்நகரம், அவ்வப்போது பூடான் மற்றும் அஸ்ஸாம் அரசுகளாலும் ஆளப்பட்டு வந்துள்ளது.
1873-ம் ஆண்டில் பிரிட்டிஷார் அருணாச்சல பிரதேப் பகுதியை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்தனர். ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதங்களில் உள்ளூர் அகா பழங்குடியினர் 'நையேதி டோவ்' என்ற பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
கண்கவரும் காட்சிகள் மட்டுமல்லாமல், பார்வையாளர்கள் மகிழ்ந்திருக்கக் கூடிய வகையில் மீன் பிடித்தல் மற்றும் ரிவர் ராஃடிங் ஆகிய பொழுதுபோக்கு விளையாட்டுகளையும் காமெங் ஆற்றையொட்டி நாம் விளையாட முடியும்.
பாலுங்போங்கில் உள்ள பாகுய் கேம் சரணாலயம் மற்றும் டிபி ஆர்கிடேரியர்ம் ஆகியவை 2600-க்கும் மேற்பட்ட ஆர்கிட்கள் அறுவடை செய்யப்படும் இடமாகவும் மற்றும் 80-வகையான ஜுவராசிகள் உள்ள இடமாகவும் உள்ளன.