போர்டி கிராமத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் சஞ்சன் பகுதிக்கு தெற்கே 20 கி.மீ தூரத்தில் இந்த பாஹ்ரோட் குகைகள் உள்ளன.1500 உயரத்தில் காணப்படும் பாஹ்ரோட் மலைகளில் அமைந்துள்ள இந்த குகைகள் பார்ஸி இன மக்களின் புனித ஸ்தலமாக பெயர் பெற்று விளங்குகிறது.
வீரமும் பலமும் பொருந்திய சௌராஷ்டிர வம்சத்தார் 1351ம் ஆண்டு வாக்கில் முஸ்லிம் படையெடுப்புகளிலிருந்து தப்பிப்பதற்காக தொடர்ந்து 13 வருடங்களுக்கு இந்த குகைகளில் ஒளிந்து வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த மலையில் இரானிய நெருப்புக்கோயில் ஒன்றைப்பெற்றிருந்த இந்த முன்னோடிகள் பின்னர் அதனை பாஹ்ரோட் குகைகளுக்கு மாற்றிக்கொண்டனர். இரான்ஷா நெருப்பு என்று அறியப்படும் அந்த புனித நெருப்பு இன்று வரை அணையாமல் எரிய வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நெருப்பை அணையாமல் எரிய வைப்பதற்காக உயிர்த்தியாகம் செய்த வீர முன்னோடிகளுக்காக தினமும் நடத்தப்படும் ஜஷான் பூஜையில் இங்கு வரும் பயணிகள் கலந்து கொள்ளலாம்.