வரலாற்றுக்குறிப்புகளின்படி, பர்குஜார் வம்ச ராஜாவான அனுப் ராய் என்பவரால் 1605 மற்றும் 1628ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது.
இதன் அஸ்திவார காலமும் ஜஹாங்கீர் மன்னரின் ஆட்சிக்காலமும் ஒத்துப்போகின்றன. வேட்டையின்போது ஜஹாங்கிர் மன்னரை ஒரு சிங்கத்திடமிருந்து இந்த அனுப் ராய் மன்னர் காப்பாற்றியதாக கதைகள் சொல்லப்படுகின்றன.
அதன் பின்னரே அனுப் ராய்க்கு இந்த இடத்தை அன்பளிப்பாக அளித்து அவருக்கான நகரம் மற்றும் கோட்டையை நிர்மாணித்துக்கொள்ள ஜஹாங்கீர் மன்னர் வகை செய்ததாக சொல்லப்படுகிறது.
அனுப் ராய் வம்சத்தின் எட்டாவது தலைமுறையான தாராசிங் மன்னரின் ஆட்சியின்போது இந்த அனுப்ஷாஹர் நகரம் மிக செழிப்பான நகரமாக பிரத்தி பெற்று திகழ்ந்திருக்கிறது. குறிப்பாக ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த நகரம் புகழ் பெற்று விளங்கியிருக்கிறது.
பிற்காலத்தில் முதல் சுதந்திரப்புரட்சியின்போது இந்த அனுப்ஷாஹர் நகரத்தில் பல கிளர்ச்சிகள் நடந்தேறின. சோட்டி காசி என்றும் அழைக்கப்படும் இந்த நகரம் கங்கை ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. காசியைப்போன்றே ஆற்றங்கரையை ஒட்டி பல கோயில்களும் விடுதிகளும் இங்கு காணப்படுகின்றன.