தாராகர் கோட்டைக்குள் அமைந்துள்ள இந்த பாதல் மஹால் இங்குள்ள சுவரோவியங்களுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. வரலாற்று காலத்தை சேர்ந்த இந்த மாளிகையின் சுவர்கள் வண்ணம் பூசப்பட்டு காட்சியளிக்கின்றன.
இந்த ஒவியங்களில் காணப்படும் இலைகள் மற்றும் முகங்களில் காணப்படும் அம்சங்கள் அக்காலத்தில் இப்பிரதேசம் அபினி விதைகளின் உற்பத்திஸ்தலமாக விளங்கியதை குறிப்பிடும் விதத்தில் வரையப்பட்டுள்ளன். சீன தேசத்துடன் அபினி வியாபாரத் தொடர்புகளை அக்காலத்திலேயே பூந்தி பிரதேசம் கொண்டிருந்ததாக வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.