ராவ் ரத்தன் சிங் மன்னரால் கட்டப்பட்டுள்ள இந்த ஹாத்தி போல் எனும் அலங்கார நுழை வாயில் அமைப்பு கர் அரண்மனைக்கான நுழை வாயிலாக அமைந்துள்ளது. இந்த அரண்மனையை நோக்கி செல்லும் செங்குத்தான பாதை இரண்டு பிரம்மாண்ட நுழைவாயில்களைக்கொண்டுள்ளது.
அவற்றில் ஒன்றான இந்த ஹாத்தி போல் எனப்படும் நுழைவாயில் அமைப்பானது இரண்டு யானைகள் இருபுறமும் துதிக்கைகளை உயர்த்தி ஒரு அரைவட்ட தோரண வளைவை உருவாக்கியிருப்பது போன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.