இமாச்சல பிரதேச மாநிலத்தின் சோலன் மாவட்டத்திலுள்ள சாத் டிபா மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 2226 மீ உயரத்தில் அமைந்துள்ள அழகிய மலைவாழிடம் தான் சைல். கிச்னர் பிரபுவின் ஆணைப்படி சிம்லாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் பாட்டியாலா மன்னர் மகாராஜா ஆதிராஜ் புபீந்தர் சிங்கின் கோடை கால தலைநகராக இவ்விடம் இருந்திருக்கிறது. இவ்வாறு நாடு கடத்தியதற்கு பதிலடியாக மகாராஜா புபூந்தர் சிங் சைல் அரண்மனையை கட்டி இவ்விடத்தை தன்னுடைய கோடைகால தலைநகராக நிர்ணயித்தார்.
1891-ல் கட்டப்பட்ட சைல் அரண்மனை சைலின் ராஜ பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கிறது. இங்குள்ள மற்றுமொரு சுற்றுலாவிற்கேற்ற இடமாக தனித்தன்மையான தாவரங்கள் மற்றும் விலங்குளையுடைய சைல் வனவிலங்குகள் சரணாலயம் விளங்குகிறது.
இந்திய முன்ட்ஜாக் மான்கள், சிறுத்தைப்புலி, கொண்டையுடைய முள்ளம்பன்றிகள், சிறுத்தைகள், காட்டுப் பன்றிகள், கோரல், சம்பார் மற்றும் ஐரோப்பிய சிவப்பு மான்கள் ஆகிய விலங்குகளை இங்கு காண முடியும்.
உலகத்திலேயே மிகவும் உயரமான இடத்தில், 2444 மீட்டர் உயரத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்று இங்கு அமைந்திருப்பதோடு, ஒரு போலோ மைதானம் ஒன்றையும் இங்கு நீங்கள் பார்க்கலாம். இவை இரண்டும் தற்பொழுது சைல் இராணுவப் பள்ளியின் கட்டுப்பாட்டில் உள்ளன.
குருத்துவரா சாஹிப், காளி கா டிப்பா மற்றும் மகராஜாவின் அரண்மனை ஆகியவை இங்கிருக்கும் இதர முக்கியமான சுற்றுலாதலங்களாகும். அதோடு இந்த இடம் மலையேற்றத்திற்கும், மீன்பிடிப்பிற்கும் மிகவும் பொருத்தமான இடமாகும்.
சைலை விமானம், ரயில் மற்றும் சாலை வழிகளில் சுலபமாக அடைய முடியும். மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் இவ்விடத்திற்கு வர மிகவும் ஏற்ற பருவமாகும்.
வசதியான விரும்பத்தக்க பருவநிலையை குளிர்காலத்திலும் வழங்குவதால் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் குளிர்காலங்களிலும் சைலுக்கு வருவார்கள்.