75 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள சைல் அரண்மனையானது சைல் நகரத்தின் பிரபலமான சுற்றுலாத்தலமாக உள்ளது. இந்த அரண்மனையை பாட்டியாலாவின் மன்னராக இருந்த மகாராஜா ஆதிராஜ் புபீந்தர் சிங் என்பவர் 1891-ம் ஆண்டு கட்டினார்.
செழுமையான பசுமை நிறைந்த பைன் மற்றும் தியோதர் மரங்களுக்கு நடுவில் ராஜ்கர் மலைகளில் அமைந்திருக்கும் இந்த அரண்மனை பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும் இடமாகும்.
சைல் நகரத்தின் ராஜ பாரம்பரிய அடையாளமாக இருக்கும் இந்த அரண்மனைதான் பாட்டியாலா மன்னரின் கோடைகால தலைநகராக இருந்த இடமாகும்.