உண்மையில் பாட்டியாலா மன்னரின் வேட்டையாடும் களமாக இருந்த சைல் வனவிலங்கு சரணாலயப்பகுதிகளை 1976-ம் ஆண்டு அரசு சரணாலயமாக அறிவித்தது.
மலையின் உச்சியில், 110 சகிமீ பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த சரணாலயம் அதனுடைய அடர்ந்த காடுகளில் பைன் மரங்கள், புதர்கள், ஓக் மரங்கள் மற்றும் புல்வெளிப்பகுதிகளால் பசுமையாக போர்த்தப்பட்டிருக்கிறது.
இந்த சரணாலயம் கணக்கிலடங்காத அளவில் கோரல், இந்திய முன்ட்ஜாக் மான்கள், சிறுத்தைப்புலிகள், கொண்டையுடைய முள்ளம்பன்றிகளின் வாழிடமாக உள்ளது.
மேலும், சிறுத்தைகள், காட்டுப் பன்றிகள், சம்பார், ஐரோப்பிய சிவப்பு மான்கள், இமாலய கருப்பு கரடிகள், பொதுவான வகை லாங்குர் குரங்குள் மற்றும் கருப்பு வகை முயல்களையும் கொண்டிருக்கிறது.
மாறுபட்ட பறவையினங்களான 'சியர் பீசன்ட்' மற்றும் 'கால்ஜி பீசன்ட்' ஆகிய பறவைகளையும் சைல் வனவிலங்கு சரணாலயத்தில் பார்க்கலாம். மச்சான்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் பல்வேறு பார்வையிடங்களிலிருந்து இந்த சரணாலயயத்தை முழுமையாக பறவையின் பார்வையில் காணும் வசதியும் உள்ளது.