கப்பார் சிங் நேகி நினைவகம் சம்பாவிலுள்ள புகழ் பெற்ற ஒரு தலம். இந்த நினைவகம் 1925 ஆம் வருடம் தாக்கூர் கப்பார் சிங் என்பவருக்காக எழுப்பப்பட்டது. இவர் 1913 ஆம் ஆண்டு கர்ஹ்வால் ரைபில்ஸ் என்ற படைப்பகுதியில் சுழல்த்துப்பாக்கி பயன்படுத்தும் வீரராக இருந்தார்.
முதல் உலகப் போரின் போது சிங்கும் அவரது படையும் ஜெர்மனியிலுள்ள ப்லாண்டேர்ஸ் என்ற இடத்தில் போரில் வெற்றி பெற்றார்கள். அவரது மறைவுக்குப் பின், தீரச்செயல் புரிந்த காரணத்திற்க்காக வழங்கப்படும் உயரிய விருதான் "தி விக்டரி கிராஸ்" அளித்து கௌரவிக்கப்பட்டார். மேலும் கர்ஹ்வால் படைப்பகுதியினர் ஒவ்வொரு வருடம் ஏப்ரல் 21 ஆம் தேதியன்று இந்த மாவீரனுக்கு அஞ்சலி செலுத்துவர்.