சம்பல் சரணாலயத்தை பார்த்து ரசிக்க பலவிதமான போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் அவற்றில் ஒட்டகச்சவாரி மற்றும் ஜீப் சவாரி ஆகிய இரண்டும்தான் குறிப்பிடத்தக்கவையாக பிரசித்தி பெற்றிருக்கின்றன.
பள்ளத்தாக்குப்பகுதிகளில் குறுக்கும் நெடுக்குமாக அமைந்துள்ள காட்டுப்பாதைகள், ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகள், சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் அடேர் கோட்டை ஸ்தலம் போன்றவற்றுக்கு இந்த ஜீப் சஃபாரி மூலம் பயணம் மேற்கொள்ளலாம்.
இந்த பயணத்தின்போது ஆற்றங்கரைப்பகுதியில் கரியல் முதலைகள், ஆலிகேட்டர் முதலைகள் மற்றும் கங்கை டால்பின்கள் போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம். சம்பல் சரணாலயத்தில் மொத்தம் 330 வகையான இருப்பிட மற்றும் புகலிடப்பறவைகள் வசிக்கின்றன.
இவற்றில் இந்திய வல்லூறு மற்றும் ராட்சத புள்ளிக்கழுகு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. சைபீரியாவிலிருந்து வருகை தரும் இடம்பெயர் பறவைகளும் இப்பிரதேசத்தில் வசிக்கும் உயிரினங்களில் அடங்குகின்றன. IN122 எனும் ஒரு முக்கியமான பறவைகள் சரணாலயமாக இது சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கும் பாடேஷ்வர் எனும் புராதனமான கோயிலுக்கு இந்த ஜீப் சஃபாரி மூலமாக பயணம் மேற்கொள்ளலாம். இந்த கோயில் வளாகத்தில் சிவபெருமானுக்கான 100க்கும் மேற்பட்ட கோயில்கள் அமைந்துள்ளன.