சம்பல் சரணாலயத்தின் உட்பகுதிகளை பார்த்து ரசிக்க உதவும் பயண வசதிகளில் இந்த மிதவைப்படகு போக்குவரத்தும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.
ஆற்றங்கரையில் காணப்படும் பறவைகள் மற்றும் விலங்குகள் போன்றவற்றை மிக அருகில் பார்க்க வசதியாக இந்த படகுகளை கையாளுவதில் படகோட்டிகள் திறமை பெற்றவர்களாக உள்ளனர்.
அனுபவமிக்க இயற்கை வழிகாட்டிகளும் உடனிருந்து காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றி பயணிகளுக்கு தேவையான தகவல்களை அளிக்கின்றனர்.
இந்த மிதவைப்படகுகள் ஆற்றின் பிளவுப்பள்ளத்தாக்குகள் வழியே மலைப்பிரதேசங்கள் வழியாக பயணிகளை அழைத்த்துச்செல்கின்றன. புல்லரிக்க வைக்கும் இந்த பயணத்தின்போது கரையோரத்தில் வெயில் காயும் முதலைகள் மற்றும் ஜோடிகளாக விளையாடும் கங்கை டால்பின்கள் போன்றவற்றை கண்டு ரசிக்கலாம்.
ஆங்காங்கு பிளவுப்பள்ளத்தாக்குகளின் உச்சியில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டு காட்சியளிக்கும் சிறு சிறு கோயில்களையும் இந்த பயணத்தின்போது பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.
ஆடுகள் இங்குள்ள செழிப்பான புல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருப்பது மற்றொரு எழிற்காட்சியாகும். ஆற்றிலுள்ள பிளவுப்பள்ளத்தாக்குகளின் பாறைக்கரைகளில் ஆங்காங்கு நீரோட்ட அடையாளங்களையும் காணமுடியும்.
வெள்ளப்பெருக்கு காலத்தில் எவ்வளவு உயரத்திற்கு ஆறு பெருக்கெடுத்திருக்கும் என்று அவற்றைப்பார்த்து ஊகித்துக்கொள்ளலாம்.