சம்பை மாவட்டத்தின் ஃபர்கான் கிராமத்தின் அருகே இந்தக் குகை அமைந்துள்ளது. இப்பகுதியில் நடைபெற்ற மிகவும் ரத்தமயமான போர் இக்குகைக்கு அருகில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாக நடந்த போரில், பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த போரில் உயிரிழந்தவர்களின் எலும்புக்கூடுகளும் இக்குகையில் கண்டெடுக்கப்பட்டு இங்கேயே பாதுகாப்பாகவும் வைக்கப்பட்டுள்ளடு.
வீரத்திற்கும், தைரியத்திற்கும் சான்றாக விளங்கும் இக்குகைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அய்ஜ்வாலில் இருந்து ஃபர்கானுக்கு பேருந்து மூலம் 92கிமீ பயணம் செய்து இந்த இடத்தை அடையலாம்.