ராஜ்தாரி மற்றும் தேவ்தாரி நீர்வீழ்ச்சிகளை நாம் சந்தரப்ரபா சரணாலயத்தில் காணலாம். அழிவின் விழிம்பிற்கு சென்று விட்ட ஆசிய சிங்கங்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த சரணாலயத்தில் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவை இனங்கள் காணப்படுகின்றன.
விலங்குகள் மற்றும் பறவைகளை தவிர்த்து இங்கு சுற்றுலா முக்கியத்தும் வாய்ந்த பல்வேறு இடங்கள் உள்ளன. அவற்றுள் ராஜ்தாரி மற்றும் தேவ்தாரி நீர்வீழ்ச்சிகள் மிக முக்கியமானவை. படிகம் போன்ற தெளிந்த நீர் பாறைகள் மீது குதித்து வரும் காட்சியானது பார்வையாளர்களுக்கு மூச்சடைய வைக்கும் ஒரு அழகிய காட்சியாகும்.
இந்த நீர்வீழ்சியை சுற்றியுள்ள இடங்களின் கண்ணுக்கினிய அமைதியான சூழல் பார்வையாளர்களுக்கு ஒரு மெய் மறக்கச் செய்யும் அனுபவத்தை தருகிறது. இந்த சரணாலயம் வாரணாசி நகரத்தில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
இங்கு சுற்றுலா வரும் மக்கள் பொதுவாக ஒரு நாள் பயணமாகவே வருகின்றனர். இங்கு சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதி இல்லை எனினும் சிற்றுண்டி மற்றும் குடிநீர் வழங்கும் வழங்கும் பல உணவகங்கள் உள்ளன.