கன்னிங்காமினால் பெயரிடப்பட்ட பாலா கிலா கோட்டை சிறிய ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாகும். இந்த கோட்டை கீர்த்தி துர்க் இருக்கும் மலையின் அடிவாரத்தில் உள்ளது.
பாலா கிலாவில் உள்ள வட்ட வடிவமான முக்கியத் தளம் 7 மீ அளவில், சுமார் 70 மீட்டர்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டையிலிருந்து பாதால் மஹாலை அடையும் வரை கல் தடுப்புகள் உள்ளன.
பாதால் மஹால் தர்வாஸாவிற்கு அருகில் நுழைவாயில்கள் எதுவும் இல்லாமலிருப்பது தான் பாலாகிலாவின் சிறப்பம்சமாகும். சாந்தேரியில் 15-ம் நூற்றாண்டில் நிலவி வந்த கட்டிடக்கலை யுக்திகளைப் பயன்படுத்தி இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது.
இந்த கோட்டையின் பாதுகாப்பு சுவர்களையொட்டியவாறு, உட்புற சுவர்களையொட்டி ஒரு வெற்றிடமான பிரகாரமும் உள்ளது. பாலா கிலாவின் சுவர்கள் 8 மீ உயரத்திற்கு கட்டப்பட்டுள்ளன.
இந்த கோட்டையின் நுழைவாயில்களை திறந்தால் கீர்த்தி துர்க் மற்றும் புரானி அதாலத் அல்லது நியாலயாவிற்கு செல்ல முடியும். சிக்கலான வடிவமைப்பைக் கொண்டிருப்பதால், இந்த கோட்டை சுற்றுலாப் பயணிகளுக்கு ஆர்வமூட்டும் கோட்டையாக இது உள்ளது.