சாந்தேரியிலேயே மிகவும் பெரிய மற்றும் மிகவும் புகழ் பெற்ற படிக்கிணறாக பாட்டிசி பாவ்டி உள்ளது. கடல்களில் இருக்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்து இந்த படிக்கிணற்றின் தண்ணீரின் அளவும் நிலையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
வருடம் முழுவதுமே ஒரே அளவில் இந்த கிணற்றின் தண்ணீர் அளவு இருப்பதே அதன் சிறப்பம்சமாக உள்ளது. 60 அடி அகலம் மற்றும் 60 அடி நீளத்துடன் உள்ள இந்த படிக்கிணறு நான்கடுக்கு மாளிகையின் அளவிற்கு ஆழமானதாகவும் உள்ளது.
இந்த கிணற்றின் முக்கியமான வாயிலில் தொடங்கும் படிக்கட்டுகள், இதன் அடிமட்டம் வரையிலும் வழிநடத்திச் செல்கின்றன. இதன் முதன்மையான படிக்கட்டுகள் முடிவு பெறும் இடத்தில் ஒரு சமதளமான அழகிய தளமும் இந்த கிணற்றைச் சுற்றிலும் உள்ளன.
32 அடுக்குகளில் இந்த கிணற்றின் படிகள் அமைந்துள்ளதால், இந்த கிணற்றிற்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. கியாஸுத்தீன் ஷா கில்ஜியின் ஆட்சிக் காலத்தில் ஷேர் கான் என்பவரால் 1485-ம் ஆண்டில் பாட்டிசி பாவ்டி கட்டப்பட்ட