ஒரு மலையின் மீது 71 மீட்டர் உயரத்தில் உள்ள சாந்தேரி கோட்டை, சாந்தேரி நகரத்தின் மிகவும் புகழ் பெற்ற நினைவுச்சின்னமாகும். இந்த கோட்டையின் பாதுகாப்பு சுவர்கள் சுமார் 5 கிமீ நீளமுடையவை.
சாந்தேரியின் முக்கியமான சுற்றுலாதலமாக விளங்கும் இந்த கோட்டையை 11-ம் நூற்றாண்டில் கீர்த்தி பால் என்ற அரசர் கட்டினார். இந்த கோட்டையின் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், இந்த கோட்டை சில முறைகள் புணரமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த கோட்டைக்கு மூன்று நுழைவாயில்கள் உள்ளன. இவற்றில் மிகவும் மேலேயுள்ள நுழைவாயில் ஹவா பௌர் என்றும், மிகவும் கீழேயுள்ள நுழைவாயில் கூனி தர்வாஸா என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோட்டையின் தென்மேற்குப் பகுதியில் ஆர்வமூட்டும் வகையிலான கட்டி-ஹாட்டி என்ற நுழைவாயிலும் உள்ளது. சாந்தேரி கோட்டையினுள் கில்ஜி மசூதி, நௌகாண்டா அரண்மனை, ஹஸ்ரத் அப்துல் ரஹ்மானின் கல்லறை போன்ற சில முக்கியமான சுற்றுலத் தலங்களும் அமைந்துள்ளன.
இந்த கோட்டையின் வடக்கு முனையில் அமைந்துள்ள ஓய்வு இல்லம், சாந்தேரி நகரத்தின் அற்புதமான காட்சிகளை மேலிருந்து காட்டும் வகையில் சிறப்பாக உள்ள