சாந்தேரியின் புகழ் மிக்க சேலைகளை விட, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புகழ் பெற்ற இடமாக சாந்தேரியின் கைத்தறி பிரிவு உள்ளது. பட்டு மற்றும் பருத்திகளில் செய்யப்பட்ட ஜரிகை பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட துணிகள், பட்டு மற்றும் பிற சேலைகள் ஆகியவை சாந்தேரியில் மிகவும் புகழ் பெற்றவையாகும்.
சாந்தேரியின் நெசவுத் தொழில் கி.மு. 4-ம் நூற்றாண்டு வரையிலும் செல்லக்கூடியதாகும். இதன் மனம் மயங்க வைக்கும் நெசவு முறை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசர்கள் மற்றும் அரசிகளின் இதயம் கவாந்த ஒன்றாகும்.
சாந்தேரியின் பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் 11-ம் நூற்றாண்டுகளிலிருந்தே அரச குடும்பத்தினரிடம் புகழ் பெற்றிருந்தனா. சாந்தேரியின் துணி வகைகள் அவற்றின் குறைந்த எடை, அப்பழுக்கற்ற புள்ளி வேலைப்பாடுகள் மற்றும் வெளிப்படையாக ஊடுருவக்கூடிய வடிவமைப்பு ஆகியவற்றிற்காக புகழ் பெற்றுள்ளன.
நல்ல ஆழமான தங்க ஜரிகைகளினாலான அலங்காரமான கரைகள் மற்றும் நுட்பமான சாயல் வேலைப்பாடுகள் ஆகியவை சாந்தேரி பட்டுப் புடவைகளின் முக்கிய அம்சங்களாகும்.
சாந்தேரியில் உள்ள நெசவாளர்கள் பாரம்பரியமாகவே இந்த தோழிலை செய்து வருபவர்களாவர். சாந்தேரி பட்டு துணிகள்--சூட் ஆடைகள், துண்டுகள் மற்றும் துப்பட்டாக்களில் பயன்படுத்தப் படுகின்றன. சாந்தேரி சேலைகளும் மற்ற நெசவுப் பொருட்களும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.