அற்புதமான சூழலில் அமைந்துள்ள அழகிய ஏரிதான் பரமேஸ்வர் தால்! வரலாற்றுச் சிறப்பு மிக்க சாந்தேரி நகரத்தில் இருந்து அரை மைல் தொலைவிலேயே இந்த ஏரி அமைந்துள்ளது.
இந்த அழகிய கோட்டை புண்டேலா ராஜபுத்திர அரசர்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்த ஏரியின் கரையில் இந்து மத கடவுளான லட்சுமணருக்கான கோவில் ஒன்றும் கண்களைக் கவரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
சிறப்பாக செதுக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ள இந்த கோவில் கவர்ச்சியான கட்டிடக்கலையை உடைய இடமாகும். 18-ம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்டு வந்த புண்டேலா அரசர் அனிருத்தா சிங் என்பவரால் கட்டப்பட்ட இந்த கோவில் அக்காலத்தில் நிலவிய சிறப்பு மிக்க கட்டிடக்கலையின் சான்றாக உள்ளது.
இந்த ஏரியின் கரைகளில் சில நினைவிடங்களும் உள்ளன. இந்த நினைவிடங்கள் ராஜபுத்திர அரசர்களை கௌரவிக்கும் நோக்கில் கட்டப்பட்டுள்ளன.
அழகு மற்றும் அமைதியால் காண்பவர்களை திணறடிக்கும் காட்சிகளைத் தரும் வகையில் இருக்கும் பரமேஸ்வர் தால் ஏரி நாடு முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் இடமாகும்.