சாந்தேரியிலுள்ள ஆன்டர் ஷேகாரில் பெருமையுடன் நின்று கொண்டிருக்கும் பெருமை மிகு ஏழடுக்கு மாளிகைதான் ராஜா மஹால்! சாந்தேரியின் நிலப்பகுதிகளை அழகுற காட்டிக் கொண்டிருக்கும் சில அரண்மனைகளில் ஒன்றாக இந்த அரண்மனை உள்ளது.
ஒரு காலத்தில் 260 மாளிகைகள் இருந்த சாந்தேரியில் இன்றளவில் 43 மாளிகைகளே உள்ளன. இந்த மாளிகை 15-ம் நூற்றாண்டின் கட்டிடக்கலையைச் சேர்ந்தது. சாம்பல் மற்றும் வெண்மை நிற மணற்கற்களைக் கொண்டும், விஸ்தாரமான சிற்பங்களையும் பார்வைக்கு கொண்டிருக்கும் அழகிய கட்டிடமாக ராஜா மஹால் உள்ளது.
பெரிய அரசவை மண்டபங்கள், அழகிய படிக்கட்டுகள், அற்புதமாக செதுக்கப்பட்ட தூண்கள் மற்றும் சமதளமான திறந்தவெளி பெவிலியன்கள் ஆகியவை இந்த அரண்மனையை பிரமிக்கத்தக்க கட்டிடமாக வைத்துள்ளன.
இந்த அரண்மனையில் இருந்து அருகிலுள்ள மற்றுமொரு அரண்மனையான ராணி மஹாலுக்கு ஒரு சுரங்கப் பாதையும் உள்ளது. இந்த ராணி மஹால், ராஜா மஹாலை விட மாறுபட்ட கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த இரு மாளிகைகளும் சேர்ந்து ராஜ்மஹால் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. சாந்தேரி சுற்றுலாவில் இந்த மாளிகைகள் முக்கியமான இடங்களாக உள்ளன.