சாந்தேரியிலிருந்து 26 கிமீ தொலைவில் தென்மேற்காக உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் தான் த்ருவாஞ்சி. அனைவருக்குமே ஏற்ற வகையிலான இந்த சுற்றுலத் தலம், சமண சமயத்தவர்களடம் தனிச்சிறப்பு பெற்ற இடமாகும்.
இந்த அமைதியான த்ருவாஞ்சி கிராமத்தில் எண்ணற்ற சமண சமய கோவில்கள் உள்ளன. வெகு காலத்திற்கு முன்னதாகவே, நாட்டின் இந்த பகுதியில் இருந்து வந்த சமண சமய கலாச்சாரத்தின் சிறப்புகளை எடுத்துக் காட்டும் சான்றுகளாக இங்குள்ள சமண கோவில்கள் உள்ளன.
மத்திய காலத்தின் துவக்கத்தில் இந்த சமண கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இன்றும் கூட, உலகம் முழுவதுமுள்ள சமணர்கள் இந்த சிறு கிராமத்தை தங்களுடைய கலாச்சாரத்திற்கான முக்கியமான தலமாக நினைவில்