கன்சால் எனும் இந்த சிறிய கிராமம் சண்டிகர் நகரத்தில் எல்லையில் அமைந்துள்ளது. சண்டிகர் யூனியன் நிர்வாக இந்த பகுதியை பஞ்சாப் மாநிலத்திடமிருந்து குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறது.
இந்த கிராமத்திற்கு அருகில் கன்சால் வனப்பகுதி எனும் இயற்கைக்கானகம் அமைந்துள்ளது. இதில் கழுதைப்புலி, கலைமான், நில்கை மான், நரி மற்றும் முயல் போன்ற விலங்குகள் வசிக்கின்றன.
இந்த வனப்பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை என்றாலும் தீவிர இயற்கை ரசிகர்கள் சண்டிகர் வனப்பாதுகாப்பு அதிகாரியிடன் விசேஷ அனுமதி பெற்று காட்டுச்சுற்றுலா மேற்கொள்ளலாம்.
இந்த வனப்பகுதிக்கு ஒரு விருந்தினர் இல்லமும் அமைந்துள்ளது. இதனைச்சுற்றி ரம்மியமான புல்வெளிகள் மற்றும் பல்வகை மலர்த்தாவரங்கள் போன்றவை காட்சியளிக்கின்றன.