1-வது செக்டாரில் சுக்னா ஏரி மற்றும் கேபிடோல் காம்ப்ளக்ஸுக்கு நடுவே இந்த ராக் கார்டன் அமைந்துள்ளது. சண்டிகர் நகரத்தில் உள்ள மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சம் என்றும் இதனை சொல்லலாம்.
நேக் சந்த் என்பவரால் 40 வருடங்களுக்கு முன்னால் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கலைப்பூங்காவில் நகர்ப்புற மற்றும் தொழிற்சாலை கழிவுப்பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல கலைப்படைப்புகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த பாறைத்தோட்ட பூங்காவில் 14 அறைகள், நீரூற்றுகள், தடாகங்கள், நடைபாதைகள் போன்றவை அழகியல் அம்சங்களோடு காட்சியளிக்கின்றன.
40 ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படும் இந்த பூங்கா வளாகம் தனித்தன்மையான கலைச்சிற்ப அமைப்புகளால் நிரம்பியுள்ளது. உடைந்த வளையல் துண்டுகள், பீங்கான் சில்லுகள், மின் கம்பிகள், பழைய வாகன உதிரிப்பாகங்கள், பழை மின்விளக்குகள் மற்றும் சாதாரணப்பொருட்களான கட்டிடக்கழிவுகள், முள் கரண்டிகள், களிமண் குண்டுகள் மற்றும் மண் பானைகள் போன்றவற்றையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் பல்வேறு நிர்மாணச்சிற்ப அமைப்புகளை இந்த பூங்காவில் பார்த்து ரசிக்கலாம்.
மனித உருவங்கள், கட்டிடங்கள், மிருக உருவங்கள் போன்ற பல்வேறு தோற்றங்களில் இந்த கலைப்படைப்புகள் காட்சியளிக்கின்றன. தினமும் காலை 9 மணிக்கு இந்த பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.