சஜனகர் என்ற சிறிய கிராமம் சந்திபூரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் நீலகிரி மலையில் இருந்து வெறும் 5 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. சந்தி தேவிக்காக இந்த கிராமத்தின் மையத்தில் அமைந்துள்ள சந்தி புதர் கோவிலுக்காக இந்த இடம் புகழ் பெற்று விளங்குகிறது.
இந்த கோவிலில் பல கடவுள்களின் சிற்பங்களை காணலாம். இது சக்தி தேவியின் சமய மரபு நிறைந்த இடமாக நம்பப்படுகிறது. நகரத்தின் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இக்கோவில் தனிமை வாய்ந்த இடத்தில் அமைதியுடன் வீற்றிருக்கிறது.
இந்த கோவில் வளாகத்தை நுழையும் போது ஒருவர் தன் கஷ்டங்களை எல்லாம் மறந்து மனதையும் ஆத்மாவையும் புனிதமான இந்த இடத்தில் அர்பணித்து விடுவார்கள். இங்கு தொல்பொருள் ஆராய்ச்சிகளும் நடப்பதால் இதுவும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இங்குள்ள கடவுளை வழிப்பட பல பக்தர்கள் இக்கோவிலுக்கு வருவதுண்டு.