கொர்லை துறைமுகத்துக்கு மிக அருகிலேயே அமைந்திருக்கும் சாவ்ல் காடு கலங்கரை விளக்கத்தை பயணிகள் இயந்திர படகின் மூலம் அடையலாம். இங்கு செல்வதற்கு 1 முதல் 1.5 மணி நேரம் ஆகும்.
இந்த கலங்கரை விளக்கம் 17-ஆம் நூற்றாண்டுகளில் ரேவ்தந்தா கடற்கரையை தேடி வருபவர்களுக்கு அடையாளச் சின்னமாக விளங்கி வந்தது. இது ரேவ்தந்தா கடற்கரையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
சாவ்ல் காடை சுற்றி காணப்படும் கற்பாறைத் தொகுதிகள் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் அதில் பாதிக்கு மேற்பட்டவை நீரில் மூழ்கியுள்ளன. இந்த கற்பாறைத் தொகுதிகளின் அருகில் 1860-ஆம் ஆண்டு அகதிகள் முகாமொன்று கட்டப்பட்டிருக்கிறது.