தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னை சொந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகள், கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலப்பகுதிகள் மற்றும் இந்தியாவின் இதர மாநிலங்களோடு நல்லமுறையில் சாலைவசதிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. தேசிய தங்க நாற்கரத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை இணைப்புத்திட்டத்தில் சென்னை மாநகரம் முக்கிய அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. தேசிய நெடுஞ்சாலைகளான NH45, NH 5, NH 6, ஆகியவை சென்னை மாநகரத்தை வடக்கிலும் தெற்கிலும் உள்ள உள்ள நகரங்களுடன் இணைக்கின்றன. அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் தமிழ்நாட்டில் உள்ள எல்லா முக்கிய நகரங்களுக்கும் சென்னையின் பிரம்மாண்டமான கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்திலிருந்து பேருந்துகளை இயக்குகிறது. சென்னை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், திருச்சி, மதுரை மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களுக்கு தனியார் சொகுசு போக்குவரத்து சேவைகளும் இயக்கப்படுகின்றன.