“மோட்ரோப்” அல்லது “தூண் பாறை” என்றும் பிரபலமாக அறியப்படும் கோ ரம்ஹா, சிரபுஞ்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாகும். இப்பாறையின் வடிவம் மற்றும் அளவு ஆகியவை ஒரு ராட்சத கூம்பைப் போன்று அமைந்து காண்போரை வசீகரிக்கிறது.
புராணங்களின் படி, கோ ரம்ஹா ஒரு தீய ஆவியின் கூம்பு வடிவ கூடையின் படிமம் என்று நம்பப்படுகிறது. எனினும், இது மட்டுமே இவ்விடத்தின் முக்கியத்துவம் அன்று.
இந்த பாறைகளின் ஊடாக பாய்ந்து ஓடி அழகிய நீர்வீழ்ச்சியாக உருமாறும் நீரோடையின் காட்சியானது, அருகாமையில் உள்ள வங்கதேச சமவெளியின் காட்சியுடன் இணைந்து காணத் தெவிட்டாத காட்சியை நம் கண்களுக்கு விருந்தாக்குகிறது.
சமவெளிகளில் இருந்து மேலெழும்பி இப்பாறைகளின் மேல் படர்ந்து செல்லும் மேகப் பொதிகள் இந்த இடத்தின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
இவை அனைத்தும் பாறைக்கு அடுத்தாற் போல் உள்ள நோக்குமுனையில் இருந்து பார்த்தால் தெரியக்கூடிய காட்சிகளாகும். ஆனால் சிரபுஞ்சியின் சாலைகள் வழியாக பயணம் மேற்கொள்வோருக்கு இப்பாறையின் இதர பகுதிகளைக் காணும் வாய்ப்பு கிட்டும்.
கோ ரம்ஹாவுக்குச் செல்ல உகந்த வழி ஷில்லாங்கிலிருந்து இயக்கப்படும் ஒரு சுற்றுலா வாகனத்தில் பதிவு செய்து வருவதே ஆகும்.