சிரபுஞ்சியின் மௌஸ்மாய் குகை, பெரும்பாலான சாதாரண சுற்றுலாப் பயணிகள் எளிதாக சென்று வரக்கூடிய குகைகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இதற்கு காரணம் என்னவெனில், எவ்வித சிறப்பு தயாரிப்புகளோ அல்லது வழிகாட்டிகளின் உதவியோ ஏதுமின்றி, சுற்றிப் பார்க்கக் கூடியதான அதன் எளிமையான அமைப்பே ஆகும்.
இந்த 150 மீட்டர் குகை, உட்புறத்தில் பூரணமாக வெளிச்சமூட்டப்பட்டுள்ளதால், இங்கு செல்லும் யாரும் அவர்கள் செல்ல வேண்டிய வழியை எளிதாக கண்டு கொள்ள இயலும்.
மிகப் பெரியதாகக் காணப்படும் இக்குகையின் நுழைவு வாயில் போகப் போக சிறிதாக ஆகிக்கொண்டே போய் விரைவில் மிகச் சிறியதாக ஆகிறது.
ஏராளமான வளைவுகள் மற்றும் திருப்பங்களைக் கொண்டிருக்கும் இந்த குகையை சுற்றிப் பார்ப்பது மிக சுவாரஸ்யமானதொரு அனுபவத்தை வழங்க்க்கூடியதாகும். ஆனால், மிக அதிக மக்கள் கூட்டத்துடன் பயணிக்க நேர்ந்தால் லேசாக மூச்சு முட்டுவது போல் உணர்வீர்கள்.
இக்குகையின் உட்புறம், பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் உறைவிடமாகவும், வௌவ்வால்கள் மற்றும் பூச்சிகளின் வசிப்பிடமாகவும் விளங்குகிறது. சொட்டு சொட்டாக வடியும் நீரிலிருந்து உருவாகியுள்ள பாறைகளின் அழகிய உருவாக்கம் இயற்கையின் மற்றொரு அதிசயமாகும்.
ஷில்லாங்கிலிருந்து ஒரு சுற்றுலா கார் அல்லது பேருந்து மூலம் மௌஸ்மாய் குகையை அடைவதே சாத்தியப்படக்கூடிய மிக எளிதான வழியாகும்.