நோங்சாவ்லியா, சோஹ்ராவிற்கு (சிரபுஞ்சி) அருகில் அமைந்துள்ள ஒரு மிகப் பிரபலமான சுற்றுலா ஸ்தலமாகும். வருடந்தோறும் இது உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து காணப்படுகிறது.
வடகிழக்கு இந்தியாவின் முதல் தேவாலயத்தைக் கொண்டிருக்கும் பெருமை வாய்ந்த இது, வெல்ஷ் மிஷனரிகளால் 1848 ஆம் ஆண்டில் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களின் காலத்தின் போது விளங்கிய அழகிய கட்டுமான பாணியை, இந்த தேவாலயத்தின் வடிவில் தெளிவாகக் காணலாம்.
இதே இடத்தில் தான், தாமஸ் ஜோன்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த மற்றொரு மிஷனரி, பிற்காலத்தில் காஸி மற்றும் ஜெயின்டியா மலையின் இதர பகுதிகள் எங்கும் பரவி, காஸி இலக்கியம் வளர பெரும் தொண்டாற்றிய காஸி எழுத்துக்களை அறிமுகப்படுத்தியது.
ஓரிரண்டு நாட்கள் இங்கு தங்கிச் செல்ல விரும்புவோர் சிரபுஞ்சி விடுமுறை உல்லாச விடுதி, கோனிஃபெரஸ் உல்லாச விடுதி போன்ற அழகிய ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மற்றும் அருகாமையில் உள்ள ஸா-ல்-மிகா பூங்கா போன்றவற்றில் தங்கிச் செல்லலாம்.
சிரபுஞ்சியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோங்சாவ்லியாவிற்குச் செல்ல, சிரபுஞ்சி அல்லது ஷில்லாங்கிலிருந்து ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்து கொள்ளலாம்.