ஆதியில் ஏகசக்ரவாரா என்று அழைக்கப்பட்ட இந்த கைவாரா ஸ்தலம் பற்றிய குறிப்புகள் மஹாபாரத காவியத்திலேயே காணப்படுகின்றன. பாண்டவர்கள் வனவாசத்தின்போது இங்கு தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. அச்சமயம் பீமன் பகாசுரன் எனும் அசுரனையும் இங்கு வதம் செய்ததாக ஐதீகங்கள் நிலவுகின்றன.
இங்கு அருகாமையில் உள்ள ஒரு குகையில் பகாசுர அசுரனின் எச்சங்கள் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் சிவராத்திரியின் போது பகாசுரனின் ரத்தம் இன்னும் வழிந்து கொண்டிருப்பதை காணலாம் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இங்குள்ள கோயில் வளாகத்தில் ஒரு இசை நீரூற்று மற்றும் தாவர காட்சியகம், ஒரு சிறு வனவிலங்கு காட்சிக்கூடம் போன்றவை அமைந்துள்ளன.
மேலும் பாண்டவர்கள் ஐவருக்கான வசிப்பிடங்களாக ஐந்து குடில்களும் காணப்படுகின்றன. இந்த ஸ்தலத்துக்கு அருகிலேயே அமரநாராயணா கோயில், பீமேஷ்வரா கோயில் மற்றும் யோகி நாராயணா ஆஷ்ரம் போன்றவையும் சுற்றுலா பயணிகள் விஜயம் செய்ய வேண்டிய இடங்களாக அமைந்துள்ளன.