பயணிகள் சிக்மகளூருக்கு வருகை தரும்போது அழகான வனப்பகுதியை கொண்டுள்ள பாபா புதன் கிரி மலைகளுக்கு தவறாமல் விஜயம் செய்வது அவசியம். தத்தாகிரி மலைப்பகுதி அல்லது இனாம் தத்தாத்ரேய பீடம் என்று அழைக்கப்படும் இந்த மலை 1895 மீட்டர் உயரத்தை கொண்டுள்ளது.
நகரத்திலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ள இது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாக விளங்குகிறது. ஆகவே இது இந்து முனிவரான தத்தாத்ரேயா பெயரையும் முஸ்லிம் ஞானியான பாபா புதன் பெயரையும் சேர்த்தே கொண்டுள்ளது.
இங்கு வருகை தரும் பயணிகள் இந்த மலைகளில் சித்தர்களால் புனிதப்படுத்தப்பட்ட மூன்று குகைகளை சென்று பார்க்கலாம். இங்குள்ள மற்றொரு ஸ்தலமான சீதாலா கோயிலில் சீதாலா மற்றும் மல்லிகார்ஜுனாவுக்கான இரண்டு சிறு கோயில்கள் காணப்படுகின்றன.
மேலும் இங்கிருந்து 1 கி.மீ தொலைவிலுள்ள மாணிக்யதாரா அருவியையும் பயணிகள் சென்று பார்க்கலாம்.பாபா புதன்கிரி மலை மலை ஏற்றம் மற்றும் நடைப்பயணம் போன்றவற்றில் ஆர்வமுள்ள சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் ஏற்ற மலை ஸ்தலமாகும்.
இந்தபகுதியில் 1930 மீட்டர் உயரமுள்ள முல்லையாநகரி சிகரமும், தத்தாகிரி சிகரமும் காணப்படுகின்றன.
அதிர்ஷ்டம் இருந்தால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரை இங்கு சுற்றுலா பயணிகள் காணலாம். பறவை வேடிக்கையில் ஆர்வமுள்ல இயற்கை பிரியர்களுக்கு இது ஏற்ற இடமாகும்.