சில்கா ஏரியின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் மங்கலஜோடி பறவைகள் சரணாலயம் எண்ணற்ற புலம்பெயர் பறவைகளுக்கு புகலிடமாக திகழ்ந்து வருகிறது.
இந்த பறவைகள் சரணாலயத்துக்கு ஈரான், ஈராக், செர்பியா, ஹிமாலய பகுதிகளிலிருந்து 135-க்கும் மேற்பட்ட புலம்பெயர் பறவை இனங்கள் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலங்களில் வந்து செல்கின்றன.
மேலும் இங்கே ஏற்பாடு செய்யப்படும் படகு பயணத்தின் மூலம் கருஞ்சிறகு நெடுங்காற் பறவை, உள்ளான், நீல நிற சுத்துநிலக் கோழி போன்ற பறவைகளை கண்டு ரசிக்கலாம். அதோடு இங்கு இறால் மீன்கள், நண்டு உள்ளிட்ட கடல் உணவுகள் வெகுப் பிரசித்தம்.