பாஸி காட்டுயிர் சரணாலயமானது பாஸி கிராமத்துக்கருகில் 50 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது. மேற்கில் விந்தியாச்சல மலைகளை எல்லைகளாக கொண்டுள்ள இது அற்புதமான இயற்கை எழிலுடன் காட்சியளிப்பதால் இயற்கை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக உள்ளது.
காட்டுயிர் ஆர்வலர்கள் விரும்பும் வகையில் பலவகையான காட்டுயிர்கள் இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன. காட்டுப்பன்றி, சிறுத்தை, கீரி மற்றும் கலை மான்கள் போன்றவை இங்குள்ள குறிப்பிடத்தக்க விலங்குகளாகும்.
மேலும் புகலிடப் பறவைகளை ஈர்க்கும் இடமாகவும் இது திகழ்கிறது. ஓரை அணை மற்றும் பாஸி அணை ஆகிய இரண்டு அணைகளும் இந்த சரணாலய வளாகத்துக்குள்ளேயே முக்கிய சுற்றுலா அம்சங்களாக இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் சுற்றுலாப்பயணிகள் இந்த சரணாலயத்துக்குள் நுழைவதற்கு சித்தோர்கர் வனத்துறை அலுவலகத்தில் முன் அனுமதி பெறவேண்டியது அவசியமாகும்.