மஹாவிஷ்ணு தெய்வத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கும்பா ஷியாம் கோயிலில் வராக அவதார வடிவில் விஷ்ணு பூஜிக்கப்படுகிறார். இந்தக்கோயில் மஹாராணா முதலாம் சங்க்ராம் மன்னரால் அவரது மருமகள் மீராவின் வேண்டுகோளுக்கிணங்க கட்டப்பட்டுள்ளது.
இது சித்தோர்கர் கோட்டையில் கும்பா கோயில் வளாகத்தினுள்ளே அமைந்துள்ளது. இந்த கோயிலின் வடிவமைப்பு சித்தோர்கர் நகரிலுள்ள மற்றொரு கோயிலான காளிகா மாதா கோயிலை பெரிதும் ஒத்திருக்கின்றது.
பிரமிடு போன்ற கோபுர அமைப்பைக்கொண்டுள்ள இது ஒரு உயரமான கூரையையும் பெற்றுள்ளது. இந்த கோயிலின் தரையில் மீராவின் குருவாகிய ரவிதாஸ் யோகியின் பாதச்சுவடுகள் காணப்படுகின்றன. இக்கோயிலின் அமைதியான தெய்வீகச்சூழல் மற்றும் புராணிகப்பின்னணி போன்றவற்றால் பக்தர்கள் அதிக அளவில் இங்கு வருகை தருகின்றனர்.