சீதாமாதா காட்டுயிர் சரணாலயமானது ஆரவல்லி மலைத்தொடரில் மால்வா பீடபூமிப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. மிக அதிகமான தேக்கு மரங்கள் காணப்படும் அடர்ந்த இலையுதிர் காடுகளை இது கொண்டுள்ளது.
மேலும், மூங்கில், சலார், நெல்லி மற்றும் பேல் மரங்கள் இந்த வனப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. ஜகம் மற்றும் கர்மோய் ஆகிய இருஆறுகள் இந்த சரணாலயத்தின் வழியே பாய்கின்றன. இவற்றில் ஜகம் ஆற்றின் குறுக்கே ஒரு அணை ஒன்றும் இப்பகுதியின் நீர்த்தேவைகளுக்காக கட்டப்பட்டுள்ளது.
சிறுத்தை, கழுதைப்புலி, குள்ள நரி, காட்டுப்பூனை, முள்ளம்பன்றி, புள்ளி மான், கரடி மற்றும் நான்கு கொம்பு மான் ஆகிய விலங்குகள் இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன. பறக்கும் அணில் எனும் வித்தியாசமான இரவு விலங்கு இங்கு இரவு நேரங்களில் மரங்களுக்கிடையே மிதந்து செல்வதைக்காணலாம்.
இந்த சரணாலயத்திற்கு ஒரு புராணிக முக்கியத்துவமும் உண்டு. ராமபிரான் தன் மனைவி சீதாதேவியுடன் வனவாசம் மேற்கொண்டபோது இங்கிருந்த வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வசித்ததாக நம்பப்படுகிறது.