புரதானமான துல்ஜா பவானி கோயில் என்றழைக்கப்படும் இந்தக்கோயில் 1535ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இது சித்தோர்கர் கோட்டையின் பிரதான நுழைவாயிலான ‘ராம் போல்’ என்றழைக்கப்படும் வாசலுக்கருகில் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் துல்ஜா பவானி அல்லது துர்யா பவானி என்றழைக்கப்படும் தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயிலின் சுவர்களை விதவிதமான ஹிந்துக்கடவுளரின் உருவங்கள் அலங்கரிக்கின்றன. சித்தோர்கர் பூர்வகுடிகளின் கலைத்திறமையை எடுத்துரைக்கும் கிரீடமாக இந்தக்கோயில் திகழ்கிறது.