தலி கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த காடுதுருத்தி சிவன் கோயில் கேரளாவின் மூன்று முக்கியமான சிவன் கோயில்களில் ஒன்றாகும். இது அழகிய வேம்பநாட் ஏரி பின்னணியில் காட்சியளிக்கும் ஒரு மலை உச்சியில் வீற்றுள்ளது.
காரா அசுரா எனும் அசுர வம்சத்து அரசனால் இந்த கோயிலுள்ள சிவன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக புராணக்கதைகள் கூறுகின்றன. மேலும் இந்த அசுர அரசனால் பூஜிக்கப்பட்ட மூன்று சிவன் சிலைகளில் இது ஒன்று எனவும் மற்ற இரண்டு சிலைகள் ஏட்டுமானூர் மற்றும் வைக்கம் கோயில்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் புராண ஐதீகங்கள் கூறுகின்றன.
சிவபெருமானை பற்றிய கதைகள் இந்த கோயிலின் கருவறையில் மரச்சிற்ப வடிப்புகளாக வடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கர்த்தவ்ய வீரார்ஜுன்யம் எனும் சித்தரிப்பு கேரள மரச்சிற்ப பாரம்பரியத்தின் அழகுக்கு சாட்சியாக விளங்குகிறது.
இந்த கோயிலுக்கு அருகிலேயே உள்ள ஏரிப்பகுதிக்கும் பக்தர்கள் விஜயம் செய்யலாம். மேலும், இந்த சிவன் கோயில் வளாகத்தில் கணபதி, துர்கா மற்றும் சாஸ்தா போன்ற கடவுள்களுக்கான சிறு சன்னதிகளும் அமைந்துள்ளன.