வட கிழக்கு பகுதிகளில் வாழும் பிற மலைவாழ் மக்களைப் போலவே சூரசந்த்பூரில் வசித்திடும் மக்களும் கைவினைப் பொருட்கள் மற்றும் தனித்தன்மையான கலைப்பொருட்கள் அதாவது மூங்கில் வேலைப்பாடுகள் மற்றும் நெசவு போன்றவற்றில் சிறந்து விளங்குகின்றனர்.
எனவே தான் சூரசந்த்பூர் கைவினைப்பொருட்கள் மற்றும் தனித்தன்மையான கலைப்பொருட்களுக்காக பிரபலமான நகரமாக விளங்குகிறது. இந்நகரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கே கிடைக்கும் வித்தியாசமான மற்றும் வண்ணமயமான பழங்குடியின கலைப்பொருட்களை சந்தைகளில் வாங்குவதில் உற்சாகமடைவார்கள்.
நியூ பஜார் மற்றும் ஓல்டு பஜார் ஆகிய சந்தைகளில் கிடைக்கும் மூங்கில் மற்றும் மர வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்களை சுற்றுலாப் பயணிகள் இங்கே ஆர்வத்துடன் வாங்குவார்கள்.
ஓல்டு பஜார் ஜென்ஹாங் பஜார் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வருகிறது. அற்புதமான தரம் மற்றும் நீடித்த உழைப்பிறகு பெயர் பெற்ற பழங்குடியின சால்வைகள் இந்த சந்தைகளில் கிடைக்கும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகும்.
கைகளால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் அதிகளவில் கிடைக்கும் முக்கியமான சந்தைகளில் ஒன்றாக சூரசந்த்பூர் உள்ளது. இந்த கைவினைப் பொருட்கள் உள்ளூர் மக்களின் கைவண்ணத்தில் உருவானவை என்பது தான் இதில் ஆச்சரியமான சங்கதி! நினைவுப் பொருட்களை வாங்குவதற்கு மிகவும் சிறந்த இடமாக இந்த சந்தை விளங்குகிறது.