சூரசந்த்பூரில் சத்தமில்லாமல் ஒதுங்கி ஓய்ந்திருக்க நினைப்பவர்களின் நினைவுக்கு உடனடியாக வருவது வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா தலமான ங்கலோய் நீர்வீழ்ச்சி தான்.
அபரிமிதமான பசுமைக்கு நடுவில் இருக்கும் ங்கலோய் கிராமத்தில் இருக்கும் ங்கலோய் நீர்வீழ்ச்சி பார்ப்பவர்களை கவருவதாகவும் மற்றும் மயக்குவதாகவும் இருக்கும். இந்த நீர்வீழ்ச்சி ங்கலோய்மௌல் என்றும் அழைக்கப்படுகிறது.
சூரசந்த்பூர் நகரத்திலிருந்து 9 கிமீ தொலைவில் உள்ள ங்கலோய் கிராமத்தை டாக்ஸிகள் மற்றும் பஸ்களில் எளிதில் அடைந்து விட முடியும். ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் இடமான ங்கலோய் நீர்வீழ்ச்சிக்கு நிறைய வாகனங்களும் வந்து செல்கின்றன.
மேலும் இந்த நீர்வீழ்ச்சிக்கு சென்று வருவதற்கு ஒரு முழு நாள் கூட செலவாவதில்லை. சில மணி நேரங்கள் இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து விட்டு, மதியத்தில் அல்லது மாலையில் நகரத்தை சுற்றிப் பார்க்க, ஷாப்பிங் செய்ய திரும்பி விட முடியும்.
இந்த கிராமத்திற்கு அமைதியான பயணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்நீர்வீழ்ச்சியைக் கண்டு ஆச்சரியம் கொள்வார்கள். அவர்களில் பலர் இந்த அமைதியான நீர்வீழ்ச்சி பாறைகளில் பாய்ந்து விழுவதை ஆர்வத்துடன் பார்ப்பதிலேயே நேரத்தை கழித்திருப்பார்கள்.
இந்நீர்வீழ்ச்சியில் தண்ணீர் விழும் ஓசை மற்றும் அது அமைந்திருக்கும் அழகிய இட அமைப்பு ஆகியவை இந்த நீர்வீழ்ச்சியை அமைதியானதாக வைத்திருக்கின்றன.