சூரசந்த்புரின் இதயம் போன்ற பகுதியில் உள்ள டுயிபுவோங் மற்றும் தாங்ஸம் சாலைகளில் உள்ள இரண்டு பழங்குடியின அருங்காட்சியகங்கள் அந்த சாலைகளின் பெயராலலேயே அழைக்கப்பட்டு புகழ் பெற்று விளங்குகின்றன.
இந்த அருங்காட்சியகங்களில் மணிப்பூர் மாநிலம் அதன் முன்னாள் அரசர்களிடம் இருந்த வரலாறு, ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்த மணிப்பூர் மற்றும் இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் இருந்த மணிப்பூர் என மணிப்பூர் மாநிலத்தின் வரலாற்றை கண்ணுக்கு முன் பார்க்க முடியும்.
இந்த அருங்காட்சியகத்தில் பெருமளவு சேகரித்து வைக்கப் பட்டுள்ள பழங்குடியின கலை மற்றும் தொல்பொருட்கள் மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு பழங்குடியின மக்களிடமிருந்தும் சேகரிக்கப் பட்டு, அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஏற்றவையாக உள்ளன.
இவற்றில் இம்மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வந்த கருவிகள், பாரம்பரிய குடிசைகளின் மாதிரிகள் மற்றும் மணிப்பூர் மக்களின் பாரம்பரிய உடைகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த பழங்குடியின மக்கள் முந்தைய காலங்களில் வேட்டையாடுவதற்காகவும், தங்களை பிறரிடமிருந்து காத்துக் கொள்வதற்காகவும் பயன்படுத்திய ஆயுதங்களும் இங்கே வைக்கப்பட்டுள்ளன.