டெடிம் சாலை என்றழைக்கப்படும் 150-வது எண் தேசிய நெடுஞ்சாலை இம்பாலிலிருந்து சூரசந்த்பூர் வரும் பாதையாக உள்ளது. இந்த நகரம் மற்றும் மாவட்டத்தின் உயிர்நாடியாக இந்த சாலை அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் மாநில அரசுப் பேருந்துகள் அல்லது டாக்ஸிகளை இம்பாலில் இருந்து சூரசந்த்பூர் செல்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இந்நகரம் மாநிலத்தின் பிற பகுதிகளுடனும் சாலை வழியாக நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.